நிச்சயதார்த்தம்
விளக்கம்
நிச்சயதார்த்தம் என்பது இந்து சமய திருமணங்களில் நடத்தப்படும் முதல் சடங்காகும். வயது வந்த ஒரு ஆணிற்கும், பெண்ணிற்கும் நடக்கப் போகும் திருமணத்திற்கு மணமகன் மற்றும் மணமகள் வீட்டார்களும், அவர்களின் உறவினர்களும் சம்மதம் தெரிவித்த பிறகு, அதனை உறுதி செய்ய தாம்பூலத்தினை (வெற்றிலை, பாக்கு, பூ போன்ற மங்கலப் பொருட்களை) மாற்றிக் கொள்கின்றனர். இவ்வாறு தாம்பூலத்தினை மாற்றி நிச்சயம் செய்து கொள்வதால் இந்த சடங்கிற்கு நிச்சய தாம்பூலம் என்றும் பெயருண்டு. இந்த சடங்கிற்குப் பிறகு அந்த பெண் மணமகளாக ஊராருக்கு அறிவிக்கப்படுகிறார்.
குறிப்பு: பூஜை மற்றும் ஹோமத்திற்கான கட்டண முறைகளை அறிந்துகொள்ள எங்களை தொடர்புகொள்ள : +91 9025 809914