விரயச்செலவு ஆகாமல் செல்வம் பெருகிட

இன்றைய காலகட்டத்தில் பொருளாதார மதிப்பு குறைவாக இருப்பதாலும், விலைவாசி அதிகமாக இருக்கின்ற காரணத்தாலும், எவ்வளவு வருமானம் வந்தபோதும் மாத இறுதியில் பற்றாக்குறையாகவே இருக்கின்றது என்று பலரும் கூறுவதை பார்த்திருப்போம். சிலநேரங்களில் அத்தகைய அவஸ்தையை நாமும் கூட அனுபவித்திருப்போம். அதற்கு தேவையில்லாத விரயச்செலவே காரணமாக இருப்பினும், அது எப்படி செலவாகிறது என்றே தெரியாமல் அனைத்து குடும்பங்களிலும் நடப்பதால், என்ன வருமானம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதையடுத்து, விரயச்செலவு ஆகாமல் செல்வம் பெருகுவதற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

பணப்பிரச்சனை

பெரும்பாலான வீடுகளில் எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும், என்னதான் சேமிப்பு ஏற்படுத்தினாலும் பணப்பிரச்சினை என்பது தீருவதே இல்லை.

ஏதாவது ஒரு குறையாகவே இருந்து கொண்டே இருக்கும்.

எவ்வளவு பணம் வந்தாலும் வீட்டில் தங்காமல் விரயச்செலவால் கரைந்து கொண்டே இருக்கும்.

இந்த விரயச்செலவு என்பது எதிர்பாராத மருத்துவ செலவு, பயண செலவு, குடும்பத்துடன் வெளியே செல்லும்போது ஏற்படும் திட்டமிடாத செலவு, தர்மகாரியங்கள் அல்லது கோயில் தொடர்பான காரியங்களுக்கு நன்கொடை அழித்தல் போன்ற செலவாக ஏற்படும்.

இத்தகைய செலவை யாரும் தடுக்கவும் முடியாது, செய்யாமலும் இருக்க முடியாது.

அதனால் பணப்பிரச்சினை ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

எலுமிச்சம் பழம்

இத்தகைய பிரச்சனைக்கு தீர்வாக எளிமையான பரிகாரத்தை ஏதாவது ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமையில் தொடங்கி செய்து வர வேண்டும்.

ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து நன்கு தண்ணீரில் கழுவிய பிறகு, அதன் மேல் குங்குமத்தை கொண்டு ஸ்வஸ்திக் சக்கரம் வரைந்து, குத்து விளக்கின் அடிப்பாகத்தில் வைத்து வணங்கவேண்டும்.

அந்த எலுமிச்சம் பழத்தை லட்சுமி தாயாக பாவித்து, தாயே லட்சுமி எங்களுக்கு ஏற்படுகிற விரய செலவை குறைத்து, நல்ல சேமிப்பாக பணம் சேரவேண்டும் என்று கூறி வணங்க வேண்டும்.

இவ்வாறு வாரம் ஒரு எலுமிச்சம்பழம் வீதமாக, ஒரு வருடம் வரை இந்த எளிய பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

மேலும், ஒவ்வொரு வாரமும் புதிய எலுமிச்சம் பழத்தை வைக்கும்போது, பழைய எலுமிச்சம் பழத்தை எடுத்து சேர்த்து வைத்து வரவேண்டும்.

அவ்வாறு ஒவ்வொரு மாதம் முடிந்ததும், அந்த மாதத்தில் சேர்த்துவைத்த நான்கு அல்லது ஐந்து எலுமிச்சம் பழத்துடன் 1 ரூபாய் தட்சணைப் பணம் சேர்த்து நீர் நிலைகளில் விட்டு விடவேண்டும்.

இவ்வாறாக 12 மாதமும் செய்துவர உங்கள் வீட்டில் செல்வவளம் பெருகும்.

பசுக்களுக்கு

அதேபோல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணிக்குள் பசு மாட்டுக்கு 6 மொந்தன் வாழைப்பழங்கள் கொடுக்கலாம்.

பசு மாட்டுக்கு வாழைப்பழம் கொடுப்பதை, கோயிலில் இருக்கும் பசு மாடுகளுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்பதில்லை, எந்த பசு மாடாக இருந்தாலும் கொடுக்கலாம்.

ஒரே பசு மாட்டுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்பதில்லை, எந்த பசு மாடாக இருந்தாலும் கொடுத்து வரலாம்.

இவ்வாறு ஒரு வருடம் வரை தொடர்ந்து செய்து வந்தால் பணக்கஷ்டம் நீங்கி வாழ்வில் நிலையான செல்வத்தை பெற முடியும்.

நாளை காலை 09:36 முதல் வைகுண்ட ஏகாதசி தொடங்குவதையடுத்து, அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று வணங்குவது சிறப்பாகும்.

நாளை முழுவதும் பகவத் கீதை, விஷ்ணு புராணம், பாகவத புராணம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவற்றை படித்து இரவில் கண் தூங்காமல் பகவான் விஷ்ணுவை நினைத்து கொண்டிருப்பது பெரும் புண்ணியத்தை தேடிகொடுக்கும்.

தேவையில்லாத செலவுகள் வராமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை உங்கள் நண்பர்கள் அறிந்து கொள்ள இந்த கட்டுரையை பகிரலாமே (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on