வயிற்று புண்ணை குணமாக்கும் பாட்டி வைத்தியம்

பொதுவாக வயிற்றில் புண்கள் இருந்தால் அதற்கான அறிகுறிகளை தெரிந்து கொள்வோம். இது செரிமானத்தன்மையை குறைக்கும். வாயிலிருந்து துருனாற்றம் வீசும். அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டும். ஜீரனத்தன்மை குறையும். அதோடுமட்டுமல்லாமல் கடுமையான வயிற்று வலி தோன்றும். எந்த ஒரு கார உணவுகளை எடுத்துக்கொண்டாலும் வயிற்று பகுதியில் எரிச்சல் உண்டாகும். உணவின் மீது வெறுப்பு தன்மை உண்டாகும். உணவு உண்டவுடன் வயிற்று வலி தொடங்கிவிடும். இதனால் தூக்கமின்மை, மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற பல பிரச்சனைகள் உண்டாகும். இதனை குணமாக்க எளிமையான பாட்டி வைத்தியங்களை இப்போது பார்க்கலாம்.

பாட்டி வைத்தியம்

இளநீரை உணவு உண்டு 1 மணி நேரம் கழித்து குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும்.

தேங்காய் பாலை குடித்து வந்தால் வயிற்று புண் குணமாகும்.

தேங்காய் பால் 20 மி.லி. எடுத்து அதனுடன் 10 மி.லி.நாட்டு பசும் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து உண்டு உண்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் காலை மற்றும் மாலை 30 மி.லி. அளவுக்கு குடித்து வந்தால் வயிற்று புண் விரைவில் குணமாகக்கூடும்.

அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்று புண் குணமாகக்கூடும்.

நெல்லிக்காய் சாறு தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் வயிற்று புண் ஆறும். அது அல்சரை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.

அகத்திக் கீரையை கழுவி சுத்தம் செய்து அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம், மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக்குடிக்கலாம்.

பூசணிக்காயின் விதைகளை நீக்கி தோல் சீவி பொடியாக நறுக்கி மிக்சியில் அரைத்து வடிகட்டி சாறு எடுத்து அதனுடன் மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்து குடிக்கலாம். தொடர்ந்து ஒரு வாரம் குடித்தால் வயிற்று புண் குணமாவதை உணர முடியும்.

முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் குடல் புண் குணமாக உதவுகிறது.

மணத்தக்காளி கீரையை மசியலாகவோ, பொரியலாகவோ அடிக்கடி சமைத்து சாப்பிட சில நாட்களுக்குள் வயிற்று புண்கள் குணமாகிவிடுவதைக் காணலாம்.

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடிங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் ஆறாத வயிற்றுப்புண்ணும் ஆறும். அத்துடன் வாயுத்தொல்லையும் குணமாகக்கூடும்.

பீட்ரூட் கிழங்கு சாற்றுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

தீராத வயிற்று வலிக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

குடல்புண் உள்ளவர்கள் முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் குடல் சம்மந்தமான அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்.

ஆட்டுப் பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறிவிடும்.

குடல் புண் உள்ளவர்கள் தினசரி முட்டை கோஸ் வேக வைத்த தண்ணீரை சூப் போல் குடித்துவந்தால் விரைவில் குணமாகும்.

தினமும் 1 டம்ளர் தேங்காய் பாலை குடித்து வர வயிற்று புண், குடல் புண், வாய் புண் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகள் தீர வாய்ப்புள்ளது.

வயிற்று புண் தீர்வதற்கு அகத்திக்கீரையை நன்றாக அலசி சுத்தம் செய்த பின்பு அதனுடன் இரண்டு பல் பூண்டு, சிறிதளவு சீரகம், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு, ஒரு கையளவு துவரம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து, நன்றாக வேக வைத்த சூப்பை குடிக்கவும்.

குடல் புண்ணிற்கு மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

தவிர்க்க வேண்டியவை

அடிக்கடி கார உணவுகள் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

வெறும் வயிற்றில் குளிர்பானங்கள் குடிப்பத்தையும் தவிர்க்க வேண்டும்.

புகை பிடித்தல், மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

மாதத்திற்கு ஒருமுறை வயிற்றை சுத்தப்படுத்த வேண்டும்.



Follow Us on