தங்கத்தாலி, மஞ்சள் கயிறு தாலி, சாஸ்திரப்படி எது சரி?

திருமணத்தில் கட்டப்படும் திருமாங்கல்யத்தை சிலர் மஞ்சள் கயிற்றில் கோர்த்து கட்டுகிறார்கள். சிலர் தங்க சரடில் பொருத்தி கட்டுகிறார்கள். சிலர் மஞ்சள் கயிற்றில் மேல்புறம் பூண் போல கோர்த்து, அதில் தாலியை இணைத்து கட்டுகிறார்கள். ஒவ்வொரு இனத்தவரும், அவர்களது முன்னோர்கள் பின்பற்றி வந்த வழக்கத்தின்படி மாங்கல்யம் அணிவிக்கிறார்கள். ஆனால் சாஸ்திரப்படி மஞ்சள் கயிற்றுத் தாலி சிறந்ததா? தங்கத்தாலி சிறந்ததா? அறிந்து கொள்வோம் வாருங்கள்.

திருமாங்கலய சரடு

திருமாங்கல்ய சரடு எந்தெந்த வகையில் அமைய வேண்டும் என்பதை 'ஸ்ம்ருதி' சொல்கிறது. அதாவது

1. ஸ்வர்ண - தங்கம்

2. ரஜத - வெள்ளி

3. தாம்ர - தாமிரம்

4. கார்ப்பாச்யாயண - கார்ப்பாசம் (பருத்தி நூல் கயிறு)

இவை நான்கில் எவற்றையும் பயன்படுத்தலாம். தவறில்லை.

விதி உண்டா?

பருத்தி நூலினால் ஆன தாலிச்சரடு விரைவில் நைந்து போகும் என்பதை கருத்தில் கொண்டு, நம் முன்னோர்கள் அவற்றை மாற்றிக் கொள்ளவும், ஒரு விதியை வகுத்துள்ளார்கள். ஆடி பதினெட்டு மற்றும் மாசி மாதங்களில் தாலிக் கயிற்றினை, குலதெய்வத்தின் முன்னிலையில் புதிதாக மாற்றிக் கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு:

தங்கத்தாலி அணிந்து இருப்பவர்கள், பாதுகாப்பு கருதி சில சமயம் கழற்றி வைப்பது உண்டு. கணவன் உயிருடன் இருக்கும் வரை எந்தச் சூழலிலும் அதனைக் கழற்றக் கூடாது.



Follow Us on