பாவங்கள் நீங்க செவ்வாய்க்கிழமை பரிகாரம்
ஒரு சிலரது வீட்டில் குடும்ப கஷ்டங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அவர்கள் எங்கு போய் சுவாமியை வழிபட்டாலும் முன்னேற்றம் என்பதே இருக்காது. அதன் பாதிப்பு தொடர்ச்சியாக இரண்டு, மூன்று தலைமுறைக்கும் கூட தொடரும். அதற்கு என்ன காரணமெனில், முன்னோர்கள் செய்த பாவம் தொடர்வது தான் பிரச்சனையாகும். அதையடுத்து, இத்தகைய பாவங்கள் நீங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் எந்த கடவுளை எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.
பாவங்கள் நீங்க
பணம் சம்பாதிக்க வேண்டும், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும், சொந்த வீடு கட்ட வேண்டும், கடன் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் பலர் இருந்தாலும், அதை ஏதோ ஒரு சக்தி தடுத்துக் கொண்டே வரும்.
குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு தேவையான முயற்சிகளை அவர்கள் செய்து கொண்டிருந்தாலும், வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்காது.
இந்நிலையில் செய்த பாவங்கள் நீங்க, முன்னேறுவதற்கான தடையை அகற்ற, எதிர்மறை ஆற்றலை எதிர்த்துப் போராட யட்சினி வழிபாடு நமக்கு கை கொடுக்கிறது.
யட்சினி வழிபாடு
தேவதைகளில் யட்சினி தேவி நல்ல தேவதையாக கருதப்படுகிறாள்.
கேட்ட வரங்களை கொடுப்பதில் யட்சினி தேவதை முதலிடம் வகிக்கிறாள்.
யட்சினி தேவதை வழிபாடு குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.
கேட்ட வரங்களை அள்ளித் தரக்கூடிய இந்த யட்சினி தேவதை வழிபாட்டை வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.
எப்படி செய்ய வேண்டும்
வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் யட்சினி தேவியை மனதார நினைத்து வீட்டில் பூஜை செய்ய வேண்டும்.
பூஜை அறையை அலங்காரம் செய்து, ஒரு சிறிய தாம்பூலத் தட்டில் மூன்று மண் அகல் விளக்குகளை வைத்துக் கொள்ள வேண்டும்.
அதில் ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய், இரண்டாவது மண் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய், மூன்றாவது மண் அகல் விளக்கில் சுத்தமான நெய் ஊற்றி திரி போட்டு யட்சினி தேவியை நினைத்து தீபம் ஏற்றவேண்டும்.
செவ்வாய்க்கிழமை மாலை 06:00 மணியிலிருந்து 07.30 மணி வரை உங்களுடைய வீட்டில் இந்த தீபம் ஒளிர வேண்டும்.
உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு எது தேவையோ, அந்த வேண்டுதலை இந்த தீபம் ஒளிரும் சமயத்தில் யட்சினி தேவியிடம் முறையிட்டால், நிச்சயமாக கூடிய விரைவில் நிறைவேறும்.
அதை கண்கூடாக காணலாம். உங்களுடைய குறிக்கோள்கள் சிறிய குறிக்கோள் எனில் 3 வாரங்களில் அது நிச்சயமாக நிறைவேறிவிடும்.
குறிக்கோள் பெரியதாக இருக்கும் பட்சத்தில், அந்தக் குறிக்கோள் நிறைவேற தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வரவேண்டும்.
குறைந்த பட்சம் 3 செவ்வாய்க்கிழமைகளில் யட்சினி தேவியை மேற்கண்ட முறையில் வழிபட்டு வரவேண்டும்.
உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு, நீங்கள் செய்த பாவமோ அல்லது உங்கள் முன்னோர்கள் செய்த பாவமோ தடையாக நின்றால் கூட, அந்த தடைகள் தகர்க்கப்பட்டு பாவ விமோசனம் கிடைக்கப்பெறும்.
வாழ்க்கையில் தோல்வியே இல்லாத முன்னேற்றம் உங்களை தேடி வரும். நம்பிக்கையோடு வழிபாடு செய்பவர்களுக்கு, யட்சினி தேவி வரங்களை வாரி கொடுப்பாள்.
பாவங்கள் நீங்க செவ்வாய்க்கிழமையில் எனென்ன பரிகாரம் செய்யலாம் என்பதை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் தெரிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).