உடம்பில் உள்ள சளியை வெளியேற்ற சிறந்த முறை?
சாதாரண இருமலுடன் சளி வந்தால் விரைவில் வெளிவந்து சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளியின் அறிகுறிகள் சரியாக தெரியவராது. அதையடுத்து, சளியின் நிறத்தை கொண்டு (பச்சை அல்லது மஞ்சள்) அதன்ன் ஆரம்பம் குறித்து கணித்து விட முடியும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நெஞ்சு சளியுடன், மூக்கடைப்பு, உடல் சோர்வு அனைத்தும் சேர்ந்து வந்து விடும். அதையடுத்து, இந்த சளியை எப்படி எளிய வழியில் விரட்டலாம் என்று பார்க்கலாம்.
என்ன செய்யலாம்?
தேங்காய் எண்ணெயுடன் கற்பூரம் சேர்த்து சூடு செய்து, அந்த எண்ணையை மிதமான சூட்டில் நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.
தோல் நீக்கிய இஞ்சி, காம்பு நீக்கிய வெற்றிலை, பத்து துளசி இலை மற்றும் சிறிது மிளகு தூள் போன்றவற்றை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து, நன்கு கொதித்ததும் இறக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து ஆற வைத்து வடிகட்டி குடித்து வர உடம்பில் இருக்கும் சளி அனைத்தும் நீங்கி விடும்.
கற்பூரம் சேர்த்த தேங்காய் எண்ணையை தொடர்ந்து தடவி வந்தால், நாள் பட்ட நெஞ்சு சளியையும் குணபடுத்தி விடலாம்.
எலுமிச்சை சாறை சுடு நீரில் நன்கு கலக்கி பின், தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும்.
மிளகுத் தூளையும், மஞ்சளையும், பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.
நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்.
சளி, இருமல் தொந்தரவு உள்ளவர்கள் ஒவ்வோர் உணவிலும் மிளகு சேர்ப்பது அவசியம்.
தவிர்க்க வேண்டியது
பால், தயிர், இனிப்பு மூன்றும் நுரையீரலில் சளியை சேர்க்கக்கூடியவை. அதனால், இவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
சாக்லேட், ஐஸ்க்ரீம் போன்றவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
பழங்களில் எலுமிச்சை, கமலா ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.