பெண் ருதுவான நேரத்தினைக் கொண்டு ஜாதகம் கணித்தால்...
பெண்களுக்கு ருது ஜாதகம் தேவையா? என்ற கேள்வி எழலாம். உண்மையில், ருதுவான நேரத்தினைக் கொண்டு கணிக்கப்படும் ஜாதகத்தை வைத்து ஒரு பெண்ணின் எதிர்காலத்தை அறிந்து கொள்ள இயலாது. பெண்களுக்கு ருது ஜாதகம் என்பது அவசியமே இல்லை. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பிறந்த ஜாதகத்தினைக் கொண்டே அவர்களது எதிர்கால பலனை அறிய இயலும். திருமணப் பொருத்தம் பார்ப்பதற்கும் பிறந்த ஜாதகம் தான் அவசியமே தவிர, ருது ஜாதகம் அல்ல. மேலும் பெரும்பாலான பெண்களுக்கு ருதுவாகும் நேரத்தினை துல்லியமாக அறிந்துகொள்ள இயலாது. அதனைக் கொண்டு சொல்லப்படும் பலன்களும் எதிர்மறை சிந்தனைகளை உருவாக்குகிறது என்பதால் இக்காலத்தில் ருது ஜாதகத்தினைக் கணிக்க வேண்டிய அவசியமில்லை. பிறந்த ஜாதகத்தினை துல்லியமாக கணித்து வைத்தாலே போதுமானது.