ராகு காலம், எமகண்டத்தில் நல்லது நடைபெற வேண்டுமா?
புதிய காரியங்கள், சுப காரியங்கள் போன்றவற்றை ராகு காலம், எமகண்டம் இருக்கும் நேரங்களில் யாரும் செய்வதில்லை. ஒருவேளை அவ்வாறு ராகு காலம், எமகண்டம் இருக்கும் காலங்களை தெரியாமல் தொடங்கும் காரியங்கள் முடிவடையாமல் இழுத்துக்கொண்டே செல்வதை அன்றாடம் பலரும் பார்த்திருப்போம். இந்நிலையில், ராகு காலம், எமகண்ட நேரத்தில் எப்படி நல்ல காரியங்கள் நடைபெறும் என்று தெரிந்து கொள்வோம்.
ராகு காலம், எமகண்டம்
நவகிரகங்களில் ராகு, கேது இரண்டிற்கும் தனித்துவம் உண்டு என்றாலும், விஞ்ஞானரீதியாக, ராகு, கேதுவிற்கு என நீள்வட்ட சுற்றுப்பாதை என்பது கிடையாது.
பொதுவாக, மற்ற கிரகங்கள் வேகமாக செல்லும்போது ஏற்படும் தூசுகள் தான் ஒன்று சேர்ந்து ராகுவும், கேதுவும் ஏற்படுகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், ராகுவின் ஆட்சிக்குரிய குறிப்பிட்ட ஒன்றரை மணி நேரமே ராகு காலம் என அழைக்கப்படுகிறது.
இந்த ராகு காலத்தில் தான், எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்து செய்கின்ற காரியங்களில் குழப்பம் ஏற்பட்டு காலதாமாகிறது.
மேலும், ராகுகாலம், எமகண்டம் இருக்கும் காலங்களில் தான் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனைகள் வருவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
அதனால் தான் அந்த நேரங்களில் பொறுமையாக, அமைதியாக இருப்பது நல்லது என்று முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
ராகு காலம் இருப்பது போல் கேது காலத்தை, கேது காலம் என்று கூறாமல், கேது காலத்தையே எமகண்டம் என்று கூறுகின்றனர்.
எதற்காக தவிர்ப்பு
ராகுவிற்குரிய ராகு காலத்திலும், கேதுவிற்குரிய எமகண்டத்திலும் நல்ல விஷயங்கள் எதையுமே யாரும் செய்வதில்லை.
ஏனெனில், ஒரு சின்ன விஷயத்தை கூட நீண்ட நாளைக்கு நடக்கும்படி ராகு செய்து விடுவர்.
உதாரணமாக, பத்து ரூபாய் செலவு செய்யக்கூடிய காரியத்திற்கு, ஆயிரம் ரூபாய் செலவு செய்து விடவேண்டிய நிலை ஏற்படும்.
அதுபோல் நாம் செய்யக்கூடிய நல்ல வேலைகளை செய்ய விடாமல் ராகு தடுத்து விடுவார்.
அத்தகைய ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் கூட நாம் சில விஷயங்களை செய்யும் போது அது நமக்கு நல்ல பலனை கொடுக்கும்.
நல்லது எப்படி நடைபெறும்
விரும்பாத வேலை அல்லது தவிர்க்க வேண்டிய பழக்கத்தை கைவிட விரும்பினால், அதை ராகு கால நேரத்தில் செய்யும்போது, அதை நாம் திரும்ப திரும்ப செய்யாமல் தடுத்து விட முடியும்.
ஒருவருக்கு நிறுத்த முடியாத கெட்ட பழக்கம் உள்ளது என்றால், அந்த கெட்ட பழக்கத்தை ராகு கால நேரத்தில் செய்யும்போது, அந்த கெட்ட பழக்கத்தை அவர் மீண்டும் அதன் பிறகு செய்ய மாட்டார்.
அதற்கான சக்தி ராகு காலத்திற்கு உள்ளது, அதனால் தான், ராகுவை போல் கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை என்று கூறப்படுகின்றது.
எமகண்டத்தில் ஒரு காரியம் செய்யும்போது, அதில் உடனடியாக தடை ஏற்படுத்துவதுதான் கேதுவின் வேலையாகும்.
ஒருவருக்கு அடிக்கடி மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டிய சூழ்நிலையிருந்தால், எமகண்ட நேரத்தில் மருத்துவ செலவு செய்வதோ அல்லது எமகண்ட நேரத்தில் தொடர்ந்து சில நாட்களுக்கு மாத்திரை சாப்பிட்டு வரவேண்டும்.
அவ்வாறு செய்து வந்தால், மருந்து மாத்திரை சாப்பிடக்கூடிய பழக்கம் படிப்படியாக குறைந்து விடும்.
ராகுகாலம், எமகண்டம் இருக்கும் நேரங்களில், அது முடியப்போகும் நேரத்தில்,இவ்வாறாக தவிர்க்க வேண்டிய செயல்களை செய்யும்போது, அதிகப்படியான நன்மை கிடைக்கும்.
ஏனெனில், ஜாதக ரீதியாக ராகு, கேது இருவரும் கெட்டது செய்தபோதும், அவர்கள் விலகும் போது அபரிதமான அதிர்ஷ்டத்தை கொடுத்து விடுவார்கள்
ராகுகாலம், எமகண்டம் நேரங்களில் தவிர்க்க வேண்டிய கெட்ட பழக்கங்களையும், மருத்துவ செலவுகளையும் செய்தால் அவைகளின் பாதிப்பு முற்றிலுமாக நீங்கும் என்பதையடுத்து, உங்களை சுற்றி எதிர்மறை எண்ணங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்கு கருங்காலி கட்டை, கருங்காலி மாலை போன்றவற்றை வீட்டில் வைத்திருப்பது நல்லது.
ராகு காலம் மற்றும் எமகண்ட காலங்களில் நல்லது நடக்க என்ன செய்ய வேண்டும் என்று கூறும் இக்கட்டுரையை ஆன்மிகம் விரும்பும் நண்பர்களுக்கு பகிருங்கள்(ஷேர்)