பிரதோஷ நாளில் இரட்டைப் பார்வை நந்தி தரிசனம்
சிவன் கோயிலில் சிவபெருமான் முன்பாக அமர்ந்திருக்கும் நந்தியின் பார்வை சிவனை பார்த்தபடி இருப்பதே வழக்கமாகும். அவ்வாறிருக்கையில் நந்தி எவ்வாறு இரட்டைப்பார்வை பார்க்கிறது என்றும், அப்படி இரட்டைப்பார்வை பார்க்கும் நந்தி எங்கே இருக்கிறது என்றும், எதற்காக அவ்வாறு உள்ளது என்றும் அறிந்திடுவோம்.
எங்கே உள்ளது?
நாகப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு காயாரோகணேஸ்வரர் கோயிலில் தான், இரட்டைப்பார்வை பார்க்கும் நந்தி உள்ளது.
இன்றைய பிரதோஷ நாளில் இந்த இரட்டைப் பார்வை நந்தியை தரிசிப்பது மிகுந்த விசேஷமாகும்.
காவல் காக்கும்
நாகப்பட்டினத்தில் வீற்றிருக்கும் அன்னை அங்குள்ள கடல் போன்று, அனைவருக்கும் தனது அருளை வாரி அருள்பவளாக இருக்கின்றாள்.
அதை உணர்த்தும் விதமாகமே அவளது கண்கள் கடலைப்போன்றே, நீல நிறமாக இருக்கிறது.
அதனாலே, "நீலாயதாட்சி' என்று அழைக்கப்படுகின்றாள்.
தனி கொடிமரத்துடன் கூடிய சன்னதியில் இருக்கிற அன்னை, இத்தலத்தில் திருமணப்பருவத்திற்கு முந்தைய "யவ்வன பருவ' கோலத்தில் காட்சி தருகிறாள்.
மேலும், அன்னை இத்தலத்தில் இறைவனை குறித்து தவம் செய்தபோது, கன்னியாக இருப்பதால், பாதுகாப்பிற்காக நந்தி தேவரை சிவபெருமான் அனுப்பினார்.
ஆனால், நந்தி தேவரோ, தான் எப்போதும் சிவபெருமானை தரிசித்திருக்க விரும்புவதாகவே கூறினார்.
அம்பாளிடம் இருந்து கொண்டே, தன்னையும் தரிசிக்கும்படி சிவபெருமான், நந்தியிடம் கூறினார்.
அதன் காரணமாகவே இங்குள்ள நந்தி, தனது கழுத்தை முழுமையாக திருப்பி, சிவபெருமான் சன்னதியை பார்த்தபடி உள்ளது.
நந்தியின் இடது கண் சிவபெருமானையும், வலது கண் அன்னையையும் பார்த்தபடி அமைக்கப்பட்டிருப்பது சிறப்பாகும்.
எனவே, இந்த நந்தியை "இரட்டைப் பார்வை நந்தி" என்று அழைக்கிறார்கள்.
இது போன்ற நந்தியை வேறு எந்த சிவன் கோயிலிலும் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நந்தியை தரிசிப்பதால், கண் தொடர்பான நோய்கள் மற்றும் பாதிப்புகள் நீங்கும் என்பது நம்பிக்கை.
சிறப்பு பூஜை
பிரதோஷ தினத்தன்று இந்த நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் செய்யப்படுகிறது.
இந்த அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுத்து காப்பரிசி படைப்பதால், திருஷ்டி, தோஷம் மற்றும் பொறாமை போன்ற பாதிப்புகள் நீங்கும்.
தொழில் சிறந்து விளங்கும், விவசாயம் நன்கு செழிப்பாக இருக்கும்.
மேலும், இந்த நந்திக்கு அருகம்புல் மாலை வாங்கி சாற்றினால் திருமணத்தடை நீங்குவதாக மக்கள் நம்பிக்கை அடைகின்றனர்.
அதேபோல், குழந்தையில்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியமும் கிடைப்பதாக கூறுகின்றனர்.
சிவபெருமான் எதற்காக நந்திதேவரை அம்மனின் பாதுகாப்பிற்காக அனுப்பி வைத்தார் என்று உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).