
பச்சை பயறு என்னும் பாசிப்பயறு, உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பெரிதும் உதவியாக இருக்கும். மேலும், இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கவும் உதவுகிறது.
முளைகட்டிய பயறு
பச்சைப் பயறை நன்கு சுத்தம்செய்து அலசி 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். 8 மணி நேரம் கழிந்ததும் நீரை நன்றாக வடித்து ஒரு பருத்தித் துணியால் கட்டி வைக்கவும். அடுத்த 8 மணி நேரத்தில் பச்சைப் பயறு நன்கு முளைவிட்டிருக்கும். அவற்றை, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டு.
நன்மைகள்
உடல் பருமனைக் குறைக்கும்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்.
உடலிற்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைக்கும்.
சரும புற்று நோயில் இருந்து பாதுகாக்கும்.
நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.
உடலிற்கு வலிமையும், ஆற்றலும் தரவல்லது.