நீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தேன் என்பது மருத்துவ குணம் நிறைந்த உணவுப்பொருள் ஆகும். பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. தூய தேனில் எதுவும் கலந்திருக்காது. நாம் சாப்பிடும் உணவில் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. மேலும் நமது சரும அழகை பாதுகாப்பதில் தேன் முக்கிய பங்காற்றுகிறது. தேனில் ஃப்ரக்டோஸ், க்ளுகோஸ் போன்ற சத்துக்கள் உள்ளது. மேலும் தாதுக்களான மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், சோடியம் குளோரின், சல்பர், இரும்பு மற்றும் பாஸ்பேட் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது. இந்நிலையில், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
நன்மைகள்
1. இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
2. உடலின் இரத்த சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கிறது.
3.உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது.
4. குளிர் மற்றும் மழை காலங்களில் தொண்டையில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் புண்களை குணமாக்குகிறது.
5.சளி மற்றும் இருமல் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கிறது.
6.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
7. தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை அளிக்கிறது.
8. உடல் எடையை குறைக்க உதவுகிறது.
முக்கிய குறிப்பு
நீரிழிவு நோயாளிகள் தேனை அளவுக்கதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
நெய்யும், தேனும் ஒன்றாக கலந்து சாப்பிடக்கூடாது.
கலப்பட தேனை எப்படி கண்டறிவது
சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறிய பிறகு, தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப்பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என அறியலாம்.
மை உறிஞ்சும் காகிதத்தில் அல்லது செய்தி வெளியாகும் நாளிதழில் சிறிதளவு தேனை ஊற்றி, சில நிமிடங்கள் வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது. செய்தித்தாளில் தேன் ஊற்றிய இடத்தில் ஊறாமல் இருந்தால் நல்ல தேனாகும்.
ஒரு கண்ணாடி டம்ளரில் முழுவதும் நீர் பரப்பி அதில் ஒரு தேக் கரண்டி தேனை மேலாக விடுங்கள். தேன் நீரில் கரையாமல் அடியில் சென்று தங்க வேண்டும். நீரில் கரையாவிடில் அது அசல் தேனாகும். நீரில் கரைந்தால் அதில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்படும்.