நீண்ட ஆயுளை கொடுக்கும் மூக்கிரட்டை

சாதாரணமாக சாலையோரங்களில் காணப்படுவதுடன், களைச் செடி என விவசாயிகளால் ஒதுக்கப்படும் செடி என்பது குறிப்பிடத்தக்கது. இது மனிதர்களுக்கு, அரிய மூலிகையாக, ஆயுளை காக்கும் மூலிகையாக விளங்குகிறது. சாரணைக் கொடி, சாரணத்தி என்றும் அழைக்கப்படும் மூக்கிரட்டை, உடலுக்கு எதிர்ப்பு சக்தி அளித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்க செடியாகும். இதன் இலைகளில், பத்துக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை மிகுந்துள்ளன. இது சிறிய வட்டமான இலைகளையும், சிவப்பு நிற பூக்களையும் கொண்டது. மூக்கிரட்டை கீரையில் பல பயன்கள் இருந்தபோதும், அதிகம் எடுத்து கொண்டால் வயிற்று போக்கும், பித்தமும் ஏற்படும். அதனால் இதை அளவோடு எடுப்பது நன்று. இந்நிலையில், மூக்கிரட்டையின் பெருமை மற்றும் பயன்கள் குறித்து பார்க்கலாம்.

அகத்தியர்

'சீத மகற்றுந் தினவடக்குங் காந்திதரும்

வாத வினையை மடிக்குங்காண்

பேதி கொடுக்குமதை உண்டாக்காற்கோமளமே!

பித்தம் அடுக்குமே மூக்கிரட்டையாய்..'

என மூக்கிரட்டையின் சிறப்பு குறித்து அகத்தியர் கூறியுள்ளார்.

பயன்கள்

புற்று நோய்ககளை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும்.

தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும்.

உடல் திசுக்களை சரி செய்து, உடலில் ஏற்படும் முதுமைத் தன்மையை போக்கி, இளமையை தக்க வைக்கும்.

மூளைக்கு ஆற்றலை அளித்து, உடலுக்கு சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் உண்டாக்கும்.

இரத்ததில் சேரும் உப்பின் அளவை குறைக்க வல்லது.

ஈரலை பலப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

உடல் உள்ளுறுப்புகள், இரத்த நாளங்கள், புத்துயிர் அடைகின்றது.

வயிற்றுப்போக்கு, குடல் புழுக்களை அழிக்க வல்லது. மேலும் ஆஸ்துமாவை போக்க கூடியது.

மேலும்,

மூக்கிரட்டை கீரையின் வேரை பொடித்து சிற்றாமணக்கு எண்ணையில் காய்ச்சி வடிகட்டி வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ள கழிச்சலை உண்டாக்கி உடலில் இருக்கும் நச்சுகளை மலத்துடன் வெளியேற்றிவிடும்.

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on