இந்திய ஜோதிடத்திற்கும் வெளிநாட்டு ஜோதிடத்திற்கும் உள்ள வேறுபாடு?

இந்திய ஜோதிடத்திற்கும் வெளிநாட்டு ஜோதிடத்திற்கும் உள்ள வேறுபாடு பல உள்ளது. அதிலும் இந்திய ஜோதிட முறை தான் துல்லியமானது என்று கூற முடியும்.

ஆன்மீகத்தின் பிறப்பிடம்

ஆன்மீகத்தின் பிறப்பிடம் இந்தியா என்று கூறினால் அது மிகையாகாது. நாம் ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் மகான்களை அதிகம் பெறுகிறோம். அந்த மகான்கள் மற்றும் சித்தர்களின் ஞானத்தின் அடிப்படையில் பிறந்தது தான் இந்திய ஜோதிட முறை. இது 9 கிரகங்களையும், 12 கட்டங்களையும் கொண்டு எழுதப்பட்டது. இதன் பஞ்ச அங்கங்களாக கருதப்படுவது பஞ்சாங்கம். அதைக் கொண்டு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னமே வர இருக்கும் கிரகணங்களை எல்லாம் (நமது முன்னோர்கள்) வரையறுத்து விட்டனர். மொத்தத்தில் இந்திய ஜோதிட முறை என்பது கரை கடந்து பரவி நிற்கும் ஆழ்கடல். அதன் ஆழத்தை இன்றைய விஞ்ஞானிகளின் அகக் கண்கள் அளக்க முடியாது.

கணிப்பு முறை

குழந்தை பிறக்கும் நேரத்தினை கொண்டு அந்நேரத்தில் நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவகிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், இலக்கணமும் அதில் குறிக்கப்பெறுகின்றன. அதன் மூலம் துல்லியமான பலன்களை எழுதி வைக்கிறோம். கணித அடிப்படையில் இந்திய ஜோதிடம் மூன்று ஸ்கந்தங்களாக பகுக்கப்பட்டுள்ளது. சித்தாந்த ஸ்கந்தம், சம்ஹித ஸ்கந்தம். ஹோர ஸ்கந்தம். இவற்றில் சித்தாந்த ஸ்கந்தம் அல்ஜீப்ரா, ட்ரிகோணமெட்ரி, ஜியோமெட்ரி, கூட்டல் கழித்தல் போன்றவற்றின் அடிப்படையில் கணிக்கிறது. சம்ஹித ஸ்கந்தம், வானவியல் மற்றும் ஜோதிடம் முதலான துறைகளைப் பேசுகிறது. ஹோர ஸ்கந்தம் கோள்களின் இயக்கம் பூமியின் மீதும் அதன் மக்களின் மீதும் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கிறது.

வெளிநாட்டு ஜோதிட முறை

வெளிநாட்டு ஜோதிட முறையில் துல்லியமாக எழுதப்பட்ட மாயா காலக்கணக்கு முறை தற்போது பெருமளவில் வழக்கத்தில் இல்லாமல் போய்விட்டது. (பின்குறிப்பு : மாயா காலக்கணக்கு முறை என்பது கொலம்பசுக்கு முந்திய இடையமெரிக்காவின் மாயா நாகரிக மக்களும்; குவாத்தமாலா, மெக்சிக்கோவின் ஒவாக்சக்கா ஆகியவற்றின் மேட்டுநிலப் பகுதியில் வாழும் தற்கால மாயா சமூக மக்களும் பயன்படுத்திய காலக்கணக்கு முறை. இது, காலக்கணக்கு முறைகளையும், நாள்கோள் விவரங்களையும் உள்ளடக்கியது. இதனை ஆங்கிலத்தில் 'Mayan's calendar' என்பார்கள்.

உங்களது வாழ்நாளை துல்லியமாக கணித்துக் வாழ்நாள் ஜாதகத்தை பெற வேண்டுமா? இங்கே அழுத்துங்கள்

சீன ஜோதிட முறை

சீன ஜோதிடம் பாரம்பரிய வானியல் மற்றும் நாள்காட்டியை அடிப்படையாக கொண்டது. சீன சோதிடம் அடிப்படையில் 10 தேவலோக தண்டுகளையும், 12 துருவக் கிளைகளையும் கொண்ட தேவ மரமாக உருவகப் படுத்தப்பட்டது. பின்பு இதைக் கணிப்பதில் இருந்த கடினத் தன்மையை முன்னிட்டு, 12 கிளைகளுக்கு பதில் 12 விலங்குச் சின்னங்களைக் கொண்டு குறிப்பிடப்பட்டது. 10 தண்டுகள் என்பன யின்-யான் முறையில் பிரிக்கப்பட்ட ஐந்து மூலகங்கள் ஆகும். ஆக மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலகங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன சோதிடம் கணிக்கப்படுகிறது. இது தனிப்பட்ட மனிதர்களை பற்றி பேசுவது கிடையாது. அந்த ஆண்டில் மக்கள் செழிப்பாக இருப்பார்களா என்ற ரீதியில் பொதுப்படையாக மட்டுமே பேசும்.

சீனாவின் ஃ பெங் ஷுயி சாஸ்திரம் கூட பொருள்களின் அடிப்படையில் தான் நன்மை - தீமைகளை பற்றிப் பேசும். அதை விடுத்து தனி நபர் ஒருவர் வாழ்க்கையில் நடக்க இருக்கும் நன்மை தீமைகளை துல்லியமாக கணிக்க இயலாது.

எனவே, இந்திய ஜோதிட முறை உலகத்துடன் ஒப்பிடும் போது தலை சிறந்தது என்றால் அது மிகையல்ல.

இந்தியாவில் கணிக்கப்படும் ஜோதிடம் எதனால், வெளிநாடுகளின் கணிப்பிற்கு மாறாக உள்ளது என்பதை உங்களுக்கு தெரிந்தவர்களும் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on