சித்திரை மாத சிறப்புகள்
ஒவ்வொரு மாதத்திற்கும் ஏதாவது ஒரு சிறப்பு நிச்சயமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் மாதத்தின் முதல் மாதமாக போற்றப்படும் சித்திரை மாதத்திற்கு உள்ள சிறப்புகளை பற்றி அறியலாம்.
சிறப்புகள்
சித்திரை மாதத்தின் முதலாம் நாளில்தான் பிரம்மதேவன் உலகத்தை படைக்க தொடங்கினார் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.
சித்ரா பௌர்ணமி நாளன்று நெய் தீபம் ஏற்றி, குபேரனின் மனைவியான சித்ரா தேவியை வணங்கினால் செல்வ வளம் பெருகும். சிலப்பதிகாரம் எனும் இலக்கியத்தில் பூம்புகாரில் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திர விழா நடந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
எமதர்மராஜனின் கணக்காளனாக விளங்கும் சித்ர குப்தன், ஒரு சித்ரா பௌர்ணமி நாளில்தான் அவதரித்தார் என்பதால், அந்நாளில் அவரை வணங்கினால் செய்த பாவங்கள் குறையும் என்பது நம்பிக்கையாகும். மேலும், சித்திரை நட்சத்திர நாளில்தான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பாவை சித்திரகுப்தன் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்திரை மாத தொடக்க நாளில் கேரள மாநிலத்தில் “கை நீட்டம்” என அழைக்கப்படும் ஒரு ரூபாய் நாணயம் வழங்கப்படும். இது பெரியவர்கள் சிறியவர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு அன்பளிப்பாக நடைபெறுகிறது. இது பல இடங்களில் நடைபெற்றாலும் கேரள மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மதுரை மீனாட்சியின் திருமண வைபவத்தை நேரில் தரிசித்தால், குடும்ப வாழ்க்கை குறைகள் மற்றும் நாக தோஷங்கள் நீங்கும். அந்த திருமணத்தைக் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக காண்போரின் தலைமுறை அனைத்திற்கும் தோஷ நிவாரணம் கிடைக்கும்.
சித்திரை திருவிழா மதுரை மட்டுமன்றி திருவல்லிக்கேணி, ஸ்ரீபெரும்புதூர், குருவாயூர், திருப்பதி, ஸ்ரீரங்கம், திருப்புகனூர், வேதாரண்யம், திருவையாறு, காஞ்சிபுரம் போன்ற ஊர்களிலும் சிறப்பாக நடைபெறுகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் சித்திரை தொடக்க நாளில் அன்னாபிஷேகம் நடைபெறும் வழக்கம் உள்ளது.
அட்சய திருதியை எனப்படும் சுக்லபட்ச திரிதியை நாளானது, தான தர்மங்களுக்கேற்ற நாளாகக் கருதப்படுகிறது. இது நிதி சேர்க்கை மட்டும் அல்ல, தர்ம காரியங்களுக்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது.
விஷ்ணு பகவான் மீன் வடிவில் அவதரித்த தினமாய் மத்ஸ்ய ஜெயந்தி சித்திரை மாத திரிதியைத் தினத்தன்று அனுசரிக்கப்படுகிறது.
சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியன்று லட்சுமி தேவி வைகுண்டத்திலிருந்து, பூமிக்கு வந்ததாகக் கூறப்படுவதால், அந்நாளில் லட்சுமி தேவியை வணங்கினால் செல்வ வளம் பெருகும்.
ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச விழா சித்திரை மாதத்தில் சிறப்பாக நடைபெறும்.
சித்திரை மாத சிறப்புகளை உங்களுக்கு தெரிந்தவர்கள் அறிந்திட பகிர்ந்திடுங்கள் (ஷேர் செய்யுங்கள்).