அஷ்டமியிலும் புதிய வேலையை தொடங்கலாம்

நீதி, நேர்மையின் சின்னமாக கருதப்படுகிற பைரவர், சிவன் கோயிலின் காவல் தெய்வமாக இருப்பதுடன். உலகைக் காக்கும் பொறுப்பையும் கவனித்து வருகிறார். அஷ்டமி தினத்தின் அதிபதியாக இருக்கின்ற பைரவரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து அறிந்திடுவோம்.

சிறப்பு

பைரவரை தேய்பிறை அஷ்டமி, சதுர்த்தி திதி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க் கிழமைகளிள் வணங்குவது மிகவும் பயனுள்ளதாகும்.

அதேபோன்று தினமும் ராகு கால நேரத்தில் பைரவருக்கு வழிபாடு செய்வது மிகுந்த நன்மையை கொடுக்கும்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவரை, தேய்பிறை அஷ்டமி தினத்தன்று தான், அஷ்டலட்சுமிகளும் வழிபட்டு தங்கள் செல்வத்தை பெருக்கி கொள்வதாக ஐதீகம்.

எனவே மாதந்தோறும் தவறாமல் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று கோயிலுக்கு சென்று பைரவரை வணங்குவது சிறப்பாகும்.

அதையடுத்து, இன்று மதியம் 12:44 முதல் தேய்பிறை அஷ்டமி திதி தொடங்குவதால், இன்று மாலையில் நடைபெறும் பைரவர் சிறப்பு பூஜையில் கண்டிப்பாக கலந்து கொள்வது அவசியமாகும்.

அஷ்டமி நாளில்

அஷ்டமி, நவமி நாட்களில் பொதுவாக எந்த காரியங்களிலும், செயல்களிலும் யாரும் ஈடுபடுவது கிடையாது.

ஏனெனில். அந்த 2 நாட்களில் தொடங்கும் செயல்கள் முழுமையாக நடைபெறாமால் தோல்வியடையும் என்பது நம்பிக்கை.

அதனால்தான், இந்நாட்களில் யாரும் புதிய காரியங்களிலும், சுப வேலைகளிலும் ஈடுபடுவதில்லை.

அத்துடன் வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் வந்தால் கூட, அதையும் ஒத்திவைக்கும் வழக்கம் இருந்தது.

இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தால் அதாவது ஒரு வேலைக்கான நேர்முக தேர்வுக்கோ, புதிதாக அன்றுதான் வேலையில் சேர்ந்துகொள்ள வேண்டி வந்தால் என்ன செய்வது என்று பலருக்கும் பெரும் குழப்பமாக இருக்கும்.

பரிகாரம்

அஷ்டமி, நவமி நாட்களில் புதிய வேலைகளை தொடங்கவும், வெளியூர் செல்ல வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டால், எளிய பரிகாரம் செய்து தொடங்கலாம், எந்த பாதிப்பும் வராமல் வெற்றியிலேயே முடிவடையும்.

விநாயகருக்கு ஒரு சிதறு தேங்காய் உடைத்து, 2 வாழைப்பழங்களை பசுவுக்கு கொடுத்தால் போதும்.

எந்த தடைகளும், சிக்கலும் வராமல் காரியம் வெற்றியடையும்.

விநாயகருக்கு சிதறு தேங்காய் போடுவதன் மூலமாக தடைகள் அனைத்தும் தேங்காய் போல் சிதறி நாலாபக்கமும் தெறித்து ஓடிவிடும் என்பது நம்பிக்கை.

அதனால், ஒரு காரியத்தில் ஈடுபடும்போது விநாயகருக்கு சிதறு தேங்காய் போடவேண்டும் என்று கூறப்படுகிறது.

எனவே, இன்று முதல் அஷ்டமி, நவமி நாட்களில் தயங்காமல். எந்த புது காரியத்தையும் பரிகாரம் செய்த பிறகு தொடங்கி துணிந்து வெற்றியடையலாம்.

விநாயகருக்கு தேங்காய் உடைப்பதன் மகிமையை உங்கள் உறவினர்களும், நண்பர்களும் அறிந்திட செய்யுங்கள் (ஷேர் செய்யுங்கள்).



Follow Us on